♪♫
TA-1982
Tamil
தேடி வந்த அன்பை
Thedi Vantha Anbai
17
views
பல்லவி
தேடி வந்தார், தேடி வந்தார், தேடி வந்தாரே தேவ சேயனாம் அன்பின் ரூபமாய்-இயேசு தேடி வந்தாரே
1ம் சரணம்
காரிருள் சூழ்ந்த பாவ உலகின் வாரிதியில் அழியா தாரகையாய் நின்று நேர் வழி காட்டிடும் மா வரும் இரட்சகராய்
2ம் சரணம்
தேடுவாரின்றியே ஓடி அலைகையில் மேடுகள் மீதினிலே கூட்டி நல் மேய்ப்பராய் மந்தையிற் சேர்த்து ஈடேற்றிட நினைந்தவராய்
3ம் சரணம்
பாரஞ் சுமந்தே உள்ளம் நொந்தோரை பரிந்து ஏற்றிடவும் போக்கிடவும் வினை நீக்கிடவும் தேவ ஆக்கினை ஏற்றவராய்
4ம் சரணம்
ஆழி போல் ஆழ்ந்த அவர் தனத்தால் தாழ்ந்தோரை வாழ்விக்கவே ஏழ்மையின் கோலமே பூண்டவராயிருந்த பாழுலகந்தனிலே
5ம் சரணம்
ஜீவனுள்ள மா நம்பிக்கை யீயும் சீயோனில் தூதுகளால் நித்தியரான பிதாவின் நற்சாயலில் நித்தம் வளர்ந்திடவே