உம் வல்லவார்த்தைகள்
Um varthaigal
பாதைக்கு வெளிச்சம் நீரே வழி நடத்தும் தேவன் நீரே அற்புதங்கள் செய்பவர் நீரே என்னை ஆளும் தேவன் நீரே நான் என்றுமே, உம்மை சேவிப்பேன் உம் பாதமே காத்திருப்பேன் எந்நேரமும் எவ்வேளையும் உமக்காகவே வாழ்ந்திடுவேன்
உம் கிருபை என்னை தேற்றுதே உம் அன்பொன்றே நிலையானதே உம் வசனம் நித்தியமே மகிழ்விக்குமே ஜீவனையே பாதைக்கு வெளிச்சம் நீரே வழி நடத்தும் தேவன் நீரே ஆனந்த தைலம் நீரே என் ஆத்தும நேசர் நீரே வழிகளில் என்னை காத்துக்கொள்வீர் தேவனே நீர் என்னோடிருப்பீர் தீங்கில் இருந்தென்னை விலக்கிக் காப்பீர் அபிஷேகித்து நடத்திடுவீர் (நான் என்றுமே) எந்நேரமும் எவ்வேளையும் உமக்காகவே வாழ்ந்திடுவேன் இஸ்ரவேலின் ஜனங்களை வழிநடத்தினை தேவன் இன்றும் என்றும் நம்மை கூட வழிநடத்துவரே எந்த பயமும் இல்லை பதட்டம் இல்லை வாழ்வை குறித்து கேள்வி இல்லை நல்ல தேவன் கையி விடாரே வார்த்தை நிறைவேற்றுவாரே