TA-2124
Tamil

ஆயிரம் நாவுகள் போதாதே

Vanthen iyya um patham

26
views
பல்லவி

வந்திடுமே இயேசுவண்டை சேர்ந்திடுமே பாவப் பாரம் தீர்ந்திடுமே வரும் பாவியை அணைப்பேனென்று வாக்கு அன்பாய் அளித்தனரே

1ம் சரணம்

பாவத்தில் மாண்ட உனைப் பங்கமின்றி விடுவிப்பேனென்கிறாரே அன்பரின் சத்தம் கேட்கும் நாளில் அன்பாய்ப் பாதம் அண்டிக்கொள்வீர்

2ம் சரணம்

செல்வத்தை நாடி ஓடிச் செல்வாயோ? சேர்த்திடுமே நரகில் எல்லாம் விழல் என்று எண்ணி நேசர் பாதம் அண்டிக்கொள்வீர்

3ம் சரணம்

மாயமே மண்ணுலகில் யாவதுமே மனக்கவலை தீருமே மயங்காமலே மனதில் தினம் மகிபரன்பில் அமிழ்ந்து நட

4ம் சரணம்

மரணமே நினையா நேரமதில் வந்துனைச் சந்திக்குமே மரணவழி விட்டுப் பரன் மாட்சி வழி நடந்திடுமே

5ம் சரணம்

மறப்பாயோ மாட்சிமை தான் மறந்து மானிடர்க்காய் மாண்டவரை மாறாப் பரிசுத்தமீந்து மன்னன் மார்பிலணைத்திடுவார்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.