TA-2134
Tamil

வருகிறாரே வானபரன் வானம்

Varukirarae vanabaran

26
views
1ம் சரணம்

நான் இருப்பேன், நடுவில் என்றாய் நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க தாமதமேன் தயை புரிய தற்பரனே, நலம் தருவாய்

2ம் சரணம்

உன்றன் மனை திருச்சபையை உலக மெங்கும் வளர்த்திடுவாய் பந்தமறப் பரிகரித்தே பாக்யம் அளித் தாண்டருள்வாய்

3ம் சரணம்

ஆதரையிலென் ஆறுதலே அன்பருக்குச் சதா உறவே பேதையர்க்குப் பேரறிவே பாதை மெய் ஜீவ சற்குருவே

4ம் சரணம்

பாடும் தேவதாசரின் கவி பாரினில் கேட்டனுதினமும் தேடும் தொண்டர் துலங்கவுந்தன் திவ்ய ஆவி தந்தருள்வாய்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.