♪♫
TA-2138
Tamil
வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே
Vathai unthan koodarathai
0
views
பல்லவி
வற்றாத நீரூற்று போலிருப்பாய் வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய் கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய் காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்
1ம் சரணம்
வாழ்க்கால்கள் ஓரம் நடப்பட்ட மரமாய் எப்போதும் கனி கொடுப்பாய் தப்பாமல் கனி கொடுப்பாய்
2ம் சரணம்
ஓடும் நதி நீ பாயும் இடத்தில் உயிரெல்லாம் பிழைத்திடுமே சுகமாக வாழ்ந்திடுமே
3ம் சரணம்
பலநாட்டு மக்கள் உன் நிழல் கண்டு ஓடி வருவார்கள் பாடி மகிழ்வார்கள்
4ம் சரணம்
பஞ்ச காலத்தில் உன் ஆத்துமாவை திருப்தியாக்கிடுவார் தினமும் நடத்திடுவார்
5ம் சரணம்
கோடைக் காலத்தில் வறட்சிக் காலத்தில் அச்சமின்றி இருப்பாய் - நீ ஆறுதலாய் இருப்பாய்