எருசலேம் என் ஆலயம்,
Yerusalem en allayam
tt%எருசலேமிலிருந்து ஒருவன் எரிகோவிற்குச் சென்றான் செல்லும் வழியில் கள்ளர் கையில் சிக்கித் தவித்து நின்றான் சற்றும் இரக்கம் அற்ற கல் நெஞ்சுற்ற கள்ளர் அவனை ஆடை உரிந்து காயமாக்கிக் குற்றுயிராய் விட்டார்
தற்செயலாய் அவ்வழியோரு ஆசாரியன் வந்தான் அவனைக் கண்டு அக்கம்பக்கம் பார்த்து விலகிச் சென்றான் உடன்தானே அவ்வழியயாரு லேவியனும் வந்தான் இவன்தானும் அந்தபடி வந்தபடி போனான் பின்பு ஒரு சமாரியன் பிரயாணமாய் வந்தான் குற்றுயிராய்க் கிடந்தோனைக் கண்டு மனது உருகி
கிட்ட வந்து எண்ணெய் வார்த்து பட்டகாயங்கட்டி திராட்சரசம் நல்கிச் சுய வாகனத்தில் ஏற்றி சத்திரத்தில் கொண்டு சென்று விட்டு ஆதரித்து மீண்டும் காலை போகும் முன்பு சத்திரத்தான் கையில்
இரண்டு பணம் தந்து இவன் காரியத்தை சொல்லி அதிகம் செலவு ஆகும் என்கில் கவலை ஒன்றும் வேண்டாம் மீண்டும் வந்து தந்திடுவேன் என்றுறுதி சொன்னான் இயேசு சொன்ன இவ்வுவமை அர்த்தம் மிக்கதையா
பரிசுத்தம் ஐக்கியம் என்னும் எருசேலமை விட்டு சுகந்த வாச ஜீவியமாம் எரிகோவிற்கு சென்றான் ஐக்கியமற்ற வாழ்வில் தீயோன் புகுந்