Yesuvae um patham
Yesuvae um patham
இயேசுவே உம் சாயல் காண ஏங்குதே என் உள்ளம் இன்னும் என்று சேர்வேன் உந்தன் சமூகம் அன்றே தீருமே எந்தன் ஆவல்
தொல்லை மிகுந்த இவ்வுலகில் நல்ல துணையும் நீரல்லவோ! இன்னும் நானும் அண்டைச் சேர உன்னத பெலனை தாரும் ஐயனே
மாய உலகின் இன்பம் வெறுத்தேன் தூயனே சமுகம் வரவே ஆவி ஆத்மா தேகம் முற்றும் அர்ப்பணித்தேன் எந்தன் தேவனே
உமது வேதம் எனது மகிழ்ச்சி இரவும் பகலுமென் தியானமன்றோ! உமது மகிமை காண மேலும் கிருபை செய்வீர்! எந்தன் தேவனே
கானல் நீரைத் தேடி ஓடும் மானைப் போல கதறுகின்றேன் எந்தன் ஆத்மா உம்மைச் சேர கிருபை செய்வீர் ! எந்தன் தேவனே
பாரில் எந்தன் ஓட்டம் முடித்தே பரத்தில் வாசம் செய்திடுவேன் உமது சமூகம் சீயோன் அடைய உதவி செய்வீர் ! தேவ ஆவியே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.